மாணவர்கள் கண்முன் ஆசிரியைகள் குடுமிப்பிடி சண்டை மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை

by Editor / 30-07-2022 01:31:55pm
மாணவர்கள் கண்முன் ஆசிரியைகள் குடுமிப்பிடி சண்டை மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியைகள் போட்ட சண்டை குறித்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார் .முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கீதாராணி மற்றும் பிரியா ஆகியோர் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்கும்போது சொந்த பிரச்சனை காரணமாக ஆசிரியர்களும் குடுமிபிடி சண்டை போட்டுக்கொண்டனர். அப்போது மற்ற ஆசிரியர்கள் சமாதானப்படுத்திய நிலையில் பிரியா மீண்டும் கீதாராணி தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via