நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

by Editor / 03-08-2022 08:57:34am
நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

கேரள மாநிலத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜைக்கான நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. 
இந்நிலையில் மழை காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு மற்றும் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நிறை புத்தரிசி பூஜை நாளை காலை 4 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் சந்நிதானத்தில் வேயப்பட்ட தங்க ஓடுகள் சேதமடைந்து மழை நீர் ஒழுகும் நிலையில் அதை மாற்றுவதற்கான பணியும் இன்றும் தொடங்கவுள்ளது.தேவஸம் போர்டுக்கு சொந்தமான செட்டிக்குளக்கரை வயல்களில் இருந்து முதல்போக சாகுபடியில் விளையும் நெற்கதிர்களை அறுவடை செய்து, அதை சபரிமலையில் வைத்து வழிபடுவது நிறைபுத்தரிசி பூஜையாகும்.நெற்கதிர்களை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்.மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் – குருவாயூரப்பன் கோயிலில் இன்று சபரிமலையை பின்பற்றி நிறைபுத்தரிசி கொண்டாடப்படவுள்ளது.

 

Tags : sabarimalai today open

Share via