கடையநல்லூரில் பாஜகவினரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

by Editor / 13-08-2022 11:02:10pm
கடையநல்லூரில் பாஜகவினரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார்.அதன் பின்னர் நிதியமைச்சர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பி காரில் சென்று கொண்டிருந்த போது, மதுரை விமான நிலைய வளாகத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது சிலர் காலணிகள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் சம்பவத்தை கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ரயில் மறியல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் கடையநல்லூர் தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிக்கூண்டு அருகே   100க்கும் மேற்பட்ட திமுகவினர்  மாவட்டச் செயலாளர் செல்லத்துரை தலைமையில் திடீரென திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 

Tags :

Share via