மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடிப்பு 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என தாலிபான் அறிவிப்பு

by Editor / 18-08-2022 12:25:35pm
மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடிப்பு 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என தாலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடித்து 35 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று வழக்கமான தொழுகை நடந்துகொண்டிருந்த போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது இதில் 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர் உடனடியாக ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

 

Tags :

Share via