வங்கி கொள்ளை வழக்கு- நகைகளை பதுக்கி வைத்திருந்த காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

by Editor / 19-08-2022 12:28:05pm
வங்கி கொள்ளை வழக்கு- நகைகளை பதுக்கி வைத்திருந்த காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார். அரும்பாக்கம் வங்கியில் கொள்ளைபோன தங்கத்தில் 3.5 கிலோ தங்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via