ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

by Editor / 28-08-2022 11:56:49am
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு  ஒலிபெருக்கி  மூலம் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையிலிருந்து 6,158 கன அடி நீர் திறப்பதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றின் கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டது.
ஆற்றின் நீர் திறப்பு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. பாபநாசம், கோவிந்தநாட்டுச்சேரி, பட்டுக்குடி, குடிகாடு பகுதிகளில் ஒலிபெருக்கி  மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பணிக்கு அணையில் இருந்து நீர்திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வைகை அணையில் இருந்து 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை அளிக்கப்பட்டது.
 

 

Tags :

Share via