புனே ரசாயன ஆலையில்  தீ விபத்து.. 14 பேர் மரணம்

by Editor / 07-06-2021 08:29:47pm
புனே ரசாயன ஆலையில்  தீ விபத்து.. 14 பேர் மரணம்


: புனேவில் கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புனேவின் உரவாடே பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் நேற்று மாலை  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளே  பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. உள்ளே 20 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குளோரின் டை ஆக்சைட் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்ட வந்த நிறுவனம் ஆகும்.இங்கு தற்போது போலீசாரும், தீயணைப்பு படையினரும் தீயணைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள். மீட்பு பணியில் இதுவறை 14 உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. உள்ளே சிக்கலான இடங்களில் பலர் சிக்கி இருப்பதாலும், கெமிக்கல் தொழிற்சாலை என்பதாலும் மீட்பு பணிகள் தாமதம் ஆகியுள்ளன.

 

Tags :

Share via