பிரமுகரிடம் பணம் பறிப்பதற்காக 3 வயது பெண் குழந்தையை கடத்திய மர்ம நபர்கள்

by Editor / 21-08-2022 01:22:34pm
பிரமுகரிடம் பணம் பறிப்பதற்காக 3 வயது பெண் குழந்தையை கடத்திய மர்ம நபர்கள்

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசியல் பிரமுகரிடம் பணம் பறிப்பதற்காக 3 வயது பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.கல்கெரி  கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் ரெட்டி என்பவரின் 3 வயது பெண் குழந்தையை நேற்று இரவு வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது இதனை கண்ட பொதுமக்கள் துரத்திச் சென்றபோது மர்ம நபர்கள் வழியில் உள்ள ஏரியில் குழந்தையை இறக்கி விட்டு  தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கர்நாடக மாநில போலீசார் மற்றும் விசாரணையில் மஞ்சுநாத் ரெட்டியிடம் இருந்து பணம் பறிப்பதற்காக அவரது குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.

 

Tags :

Share via