ஆபாச புகைப்பட சர்ச்சையில் சிக்கிய பிரதமர்
பின்லாந்து பிரதமரான இருப்பவர் சன்னா மரின்(34). கடந்த மாதம், அவர் வீட்டில் தனது தோழிகளுடன் மது விருந்து பார்ட்டி பண்ணுவது குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து அவர் தான் போதை மருந்து எடுத்துக்கொள்ளவில்லை என்பதை சோதனை மூலம் நிருபித்தார். இந்த நிலையில், பார்ட்டி செய்த அன்று சன்னா மரினாவின் இரண்டு தோழிகள், தங்களது மேலாடைகளை கழற்றி எரிந்த நிலையில், இரண்டு பெண்கள் முத்தமிட்டுக்கொண்டிருப்பதும், அதில் ஒருபெண் ஃபின்லாந்து என எழுதப்பட்ட அட்டையால் தன்னுடைய உடல் பாகத்தை மறைப்பதும் போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து கண்ணீர் மல்க பேசிய அவர், "நானும் ஒரு மனுசி தான். எனக்கு என்று தனி நேரங்கள் இருக்கிறது. அதில் நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். ஆனால், ஒரு நாள் கூட என் வேலையை நான் தவறவிட்டதில்லை" என்று தெரிவித்தார்.
Tags :