பசு மற்றும் நாயுடன் உடலுறவில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரி

by Editor / 25-08-2022 03:07:45pm
பசு மற்றும் நாயுடன் உடலுறவில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரி

ஆந்திர மாநிலம் விஜய நகரம் ராஜம் மண்டலம் காஞ்சிரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், (விஆர்ஓ ஓய்வு) வருவாய் துறையில் நிலங்கள் மற்றும் நில அளவைத் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார், இவர் கடந்த சில ஆண்டுகளாக பசுக்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுடன் இயற்கைக்கு முரணாக உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரின் இந்த நடவடிக்கைகளை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நன்கு அறிந்திருந்தனர், ஆனால் நாகரீகம் கருத்தி அதுகுறித்து யாரும் வெளியில் பேசாமல் இருந்து வந்தனர். இந்நிலையில்தான் ராமகிருஷ்ணா பசுவுடன் இயற்கைக்கு முரணாக உடலுறவில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதில், ராமகிருஷ்ணா உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல முறையில் இருப்பதும் ஆனால் அவர் கால்நடைகளுடன் உடலுறவில் ஈடுபடும் செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.

 

Tags :

Share via