போதைப்பொருள் கொடுத்து பாஜக பெண் நிர்வாகி கொலை உதவியாளர்கள் கைது.

by Editor / 26-08-2022 08:06:46pm
போதைப்பொருள் கொடுத்து பாஜக பெண் நிர்வாகி கொலை உதவியாளர்கள் கைது.

அரியானா மாநில பாஜக நிர்வாகியும்,பிரபல நடிகையுமான சோனாலி போகத் தனது அலுவலக ஊழியர்களுடன் கோவாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று அதிர்ச்சி செய்தி வெளியானது. இந்நிலையில் சோனாலி அவரது உதவியாளர்கள் சுதிர்சங்வான், சுக்விந்தர் வாசி ஆகியோரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். என்று அவரது சகோதரர் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து சோனாலியின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டதற்கான தடயங்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து தெரிவித்த போலீசார், "சோனாலிக்கு அவரது உதவியாளர்கள் வலுக்கட்டாயமாக போதைப்பொருள் கொடுத்தததில் அவர் சுய கட்டுப்பாட்டை இழந்துள்ளார். அவர் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, அவரை கழிப்பறைக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு 2 மணி நேரம் என்ன செய்தார்கள் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை" என்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சோனாலியின் உதவியாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via