குற்றவாளிகளை விரைவில் கண்டறியும் வகையிலும் பிரத்யேக வாகனம்

by Editor / 04-09-2022 10:52:48am
 குற்றவாளிகளை விரைவில் கண்டறியும் வகையிலும் பிரத்யேக வாகனம்

குற்ற நிகழ்வுகளின் மாதிரிகள் சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவதால் ஏற்படும் கால தாமதத்தை போக்கும் வகையிலும், குற்றத்தின் நிகழ்விடத்திலேயே அறிவியல் சார்ந்த தடையங்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை விரைவில் கண்டறியும் வகையிலும் பிரத்யேக வாகனம், நீலகிரி மாவட்ட தடயவியல் துறைக்கு வழங்கப் பட்டுள்ளது.இதை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணன் செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார்.குற்றவாளிகளை விரைவில் கண்டறியவும் குற்றப் புலனாய்வு அறிக்கைவழங்கவும் காவல்துறைக்கு இந்த பிரத்தியேக வாகனம் தடய அறிவியல் ஆய்வக வாகனம் அளிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via