அரசு பேருந்து மீது கார் மோதியதில் கேரளாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
காரின் முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் கேரளாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுங்காடு பகுதியை சேர்ந்த அபிஜித் என்பவர் தனது மனைவி 2 வயது பெண் குழந்தை மற்றும் உறவினர்கள் 10 பேருடன் பழநிக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.பண்ணைபட்டி அருகே வந்தபோது அவரது காரின் முன்பக்க டயர் வெடித்ததால் தடுப்பு சுவர் மீது மோதி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது .இதில் காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் அதே இடத்தில் பலியானார் அபிதீன் இரண்டாவது பெண் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
Tags :