நீரில் மூழ்கி பலியான மாணவிகளுக்கு .2 லட்சம் நிதியுதவி முதல்வர் ஸ்டாலின்

by Editor / 11-09-2022 12:09:29pm
நீரில் மூழ்கி பலியான மாணவிகளுக்கு .2 லட்சம் நிதியுதவி முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல் மாவட்டம் அத்திப்பழகானூரில் வசித்துவரும் கணேசன், வெண்ணிலா தம்பதியினரின் மகள் க. ஜனனி (14) மற்றும் கண்ணன், தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகள் க ரச்சனா ஸ்ரீ(15) ஆகிய 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இன்று பள்ளி விடுமுறை என்பதால் அருகிலுள்ள நத்தம் மான்குட்டையில் நீச்சல் பழகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். இவர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நீரில் மூழ்கி உயிரிழந்த 2 மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via