இன்ஸ்டாவில் காதல் வலை... 16 வயது சிறுமி..60 சவரன் நகையை பறித்த . இளைஞரை தேடும் போலீசார்

by Editor / 11-09-2022 12:28:26pm
இன்ஸ்டாவில் காதல் வலை... 16 வயது சிறுமி..60 சவரன் நகையை பறித்த . இளைஞரை தேடும் போலீசார்

மதுரை வில்லாபுரத்தில் உள்ள ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்( 22) என்பவருடன் பழகி வந்துள்ளார்‌. இந்நிலையில் இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல் சுற்றி வந்துள்ளனர். இதைபயன்படுத்தி சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடமிருந்து தங்க நகையை வாங்கி விற்று சந்தோசமாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து மகளிடம் விசாரித்தபோது சதீஷ்குமார் என்பவரிடம் நகையை கொடுத்ததாக தெரிவித்தார். எனவே இது குறித்து சிறுமியின் பெற்றோர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் எனது மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியுள்ளதாக புகார் கொடுத்தனர். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via