வினோதமான அனுபவம் : காந்தமாக மாறிய இவரது கைகள்!

by Editor / 11-06-2021 07:39:06am
வினோதமான அனுபவம் : காந்தமாக மாறிய இவரது கைகள்!

இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை குறைந்துவரும் நிலையில், மூன்றாவது அலை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள சிட்கோ பகுதியில் வசித்து வரும் அரவிந்த் சோனார்(71 ) என்பவர், கடந்த மார்ச் 9ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். அதன் பின் கடந்த 2ஆம் தேதி இரண்டாவது டோஸ் போட்டுள்ளார். முதல் டோஸ் ஊசியை அரசு மருத்துவமனையில் போட்ட இவர் இரண்டாவது டோஸ் தனியார் மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்.

இந்நிலையில் தீடீரென அரவிந்த் சோனர் ஊசி போட்ட கையில் இரும்பு பொருட்கள் எல்லாம் ஒட்டுக்கொண்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அவரது மகன் வீட்டில் உள்ள கரண்டிகள், காயின்களை அவர் கையில் வைத்து பார்த்தில் அவரது கை காந்தம் போல ஒட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனை டாக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து டாக்டர்கள் அவர் வீட்டிற்கு சென்று அவருக்கு ஏற்பட்ட இந்த காந்த கைக்கு காரணம் என்ன? அது உண்மைதானா? என்பது குறித்து ஆய்வுசெய்தனர். இதன்முடிவில் தான் இதற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அப்பகுதியில் சுமார் 3.5 லட்சம் பேர் இவர் போட்டுக்கொண்டபோதும் இதுவரை இந்தமாதிரியான நிலை வேறுயாருக்கும் ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.இது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பிரபல ஆங்கில நாளிதழுக்கு விளக்கம் அளித்துள்ளனர். அப்போது, உடலில் இரும்பு பொருட்கள் ஓட்டுவது என்பது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. காந்த சக்திக்கு மட்டுமே இரும்பு பொருட்கள் ஒட்டும் நிலையில் உடம்பில் ஓட்ட என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். தற்போது உள்ள அறிவியல் படி இது சாத்தியமில்லை. அதை நாம் ஆய்வு செய்தால் தான் தெரியும். ஆனால் இதற்கும் அவர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கும் சம்மந்தம் இருக்காது என கூறியுள்ளனர்.

 

Tags :

Share via