சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

by Staff / 22-09-2022 02:47:06pm
சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

உத்திரபிரதேச மாநிலம் எடாவா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிகு (10), அபி (8), சோனு (7), ஆர்த்தி (5) ஆகிய 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய குழந்தை மற்றும் அந்த குழந்தையின் பாட்டி ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரையும் எடாவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories