மருத்துவமனை மீது தாக்குதல் - இஸ்ரேல் பரபரப்பு கருத்து

by Staff / 19-10-2023 05:22:17pm
மருத்துவமனை மீது தாக்குதல் - இஸ்ரேல் பரபரப்பு கருத்து

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 13-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அங்குள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு படை அதிகாரியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்படி, “முதன்மையாக, கார் நிறுத்துமிடத்தில் ராக்கெட் வெடித்தது என்பது இஸ்ரேலிய விசாரணையில் தெரியவந்தது” என கூறினார். இந்த குண்டுவெடிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. அங்கு 15 கார்கள் மட்டுமே உள்ளன என்பது தெளிவாகிறது. 500 பேர் உண்மையில் இறந்தால், அவர்களின் உடல் என்ன ஆனது?” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via