நில மோசடியில் ஈடுபட்ட சார்பதிவாளர் உள்ளிட்ட 4பேர் கைது -2 பேருக்கு வலைவீச்சு 

by Editor / 29-09-2022 11:26:36pm
நில மோசடியில் ஈடுபட்ட சார்பதிவாளர் உள்ளிட்ட 4பேர் கைது -2 பேருக்கு வலைவீச்சு 

நில மோசடியில் ஈடுபட்ட சார்பதிவாளர் உள்ளிட்ட 4பேர் கைது -2 பேருக்கு வலைவீச்சு 

மதுரையைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து தியாகராஜ செட்டியார். இவருக்குச் சொந்தமாக  ஆயிரப்பேரி கிராமம்  பழைய குற்றாலம் பகுதியில் சுமார் 10ஏக்கர் நிலமுள்ளது.இதனை குடும்பத்தினருக்கு பிரித்துக்கொடுத்துள்ளார்,இந்த நிலையில் இவரது மகள் லலிதா என்பவரது பெயரில் ஒரு ஏக்கர் 75 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பராமரிக்காமல் அப்படியே வைத்துள்ளனர்.இந்த நிலையில் அவரது வாரிசான  லலிதா பெயரில் இருந்த அந்த நிலத்தை போலியாக லலிதா என்ற ஒருவரை தயார் செய்து  கருமுத்து தியாகராஜ செட்டியார் வாரிசு என்பதற்கு லலிதாவுக்கு வாரிசு சான்று மற்றும் அவருடைய இறப்பு சான்று ஆகியவற்றையும் தயார் செய்து இந்த நிலத்தை சுரண்டையை சார்ந்த பவுன்ராஜ் தென்காசியை சேர்ந்த முகமது ரபிக்,மற்றும்  சோமசுந்தர பாரதி ஆகிய மூன்று பேருக்கும் கருமுத்து தியாகராஜ செட்டியார் மனைவி பத்மாவதியின் மகள் லலிதா தென்காசி நம்பர் 1 சாரபதிவாளர் அலுவலகத்தில் வைத்து பதிவு செய்து நிலத்தைஇந்த நிலையில் நிலத்தின் உண்மையான உரிமையாளரான கருமுத்து தியாகராஜ செட்டியார் உடைய மகள் லலிதா என்பவர் திருச்சியிலிருந்து வந்து பார்த்தபோது தனது நிலம் வேலிபோடப்பட்டதைக்கண்டு தனது  நிலம் அபகரிப்பு செய்யப்பட்டிருப்பதாக தென்காசி மாவட்ட காவல்துறையில் நிலா அபகரிப்பு தடுப்பு பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜின் உத்தரவின்பேரில் நில தடுப்பு உதவி கண்காணிப்பாளர் தெய்வம் மற்றும் ஆய்வாளர் சந்தி செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் நில மோசடிநடைபெற்றது உறுதியானது. இதன் தொடர்ச்சியாக தென்காசி எண் .1 பத்திரப் பதிவு அலுவலக பதிவாளர்  மணி,நிலத்தை எழுதி வாங்கிய சோமசுந்தர பாரதி, சாட்சி கையெழுத்திட்ட வடிவேல், தனசீலன் ஆகிய 4 நபர்களும் கைது செய்யப்பட்டனர், மேலும் சுரண்டையைச்  சார்ந்த பவுன்ராஜ் தென்காசியை சேர்ந்த முகமது ரபீக்  ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.கைது செய்யபட்டவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நிலமோசடி சட்டம் தமிழகத்தில் அமல் படுத்தப்பட்ட பின்னர் சார்பதிவாளர் உள்ளிட்டோர் மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்  தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Tags :

Share via