துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 3 பேர் பலி

by Staff / 03-10-2022 11:17:54am
துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 3 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை நடைபெற்றது. இதற்காக, பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று துர்கா பூஜையில் 300 பேர் கலந்துக் கொண்டனர். இந்நிலையில், பந்தலில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து தீயில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 42 பேர் படுகாயமடைந்துள்ளனர். மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 10 மற்றும் 12 வயதை சேர்ந்த இரு சிறுவர்கள், 45 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via