3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் நெல்லை சந்திப்பு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு- காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன்
நெல்லை பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நெல்லை சந்திப்பு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பாக கட்டிட ஒப்பந்தகாரர் ஜான் கென்னடி பள்ளி தலைமையாசிரியர் பெரசிஸ் ஞான செல்வி மற்றும் பள்ளி தாளாளர் செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் தகவல்
Tags :