ரூ 3. 57 லட்சம் மோசடி செய்த பெண் கைது. .

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை சங்கன்கோட்டை தெருவை சேர்ந்த கஸ்தூரி ( 44). என்பவர் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தீபாவளி சீட்டுநடத்துவதாக தெரிவித்திருக்கிறார்.இதன்படி சீட்டு நடத்தி கடந்த 4 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட வர்களிடமிருந்து தீபாவளி பண்டு சேர்த்து திரும்பகொடுத்துள்ளார்.இதனையொட்டி பரவையை சேர்ந்த 15 பேர் அன்னபூரணி (59) என்பவர் மூலம் சீட்டு கட்டி ரூ. 3. 57 லட்சம்கஸ்தூரியிடம் கொடுத்திருக்கிறார்கள்.அதன் பின் தங்களது தவணை காலம் முடிந்ததும் பணத்தை திரும்பி கேட்டுள்ளனர்.ஆனால் கஸ்தூரி திரும்ப தருவதாக கூறி காலம் கடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாக சென்று விட்டார்.
இது சம்பந்தமாக அன்னபூரணி கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கஸ்தூரியை கைது செய்தனர்.
Tags :