குடிக்க பணம் தராததால் தூக்கு போட்டு தற்கொலை
கோவை சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் 30 வயதான விஜய் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று விஜய் தனது தாயாரிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார், ஆனால் அவர் பணம் தர மறுத்ததாக தெரிகிறது, இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை இ. எஸ். ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
Tags :