வட மாநில தொழிலாளர் குறித்து வதந்தி:பிரஷாந்த் உம்ராவை பிடிக்க - தனிப்படை டெல்லி சென்றது.

by Editor / 05-03-2023 11:16:59am
வட மாநில தொழிலாளர் குறித்து வதந்தி:பிரஷாந்த் உம்ராவை பிடிக்க -  தனிப்படை டெல்லி சென்றது.


வட மாநில தொழிலாளர் குறித்து சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய பிரஷாந்த் உம்ராவ்  மீது தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் பிரசாந்த் உம்ராவ் வை கைது செய்ய திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், மத்தியபாகம் ஆய்வாளர் ஐயப்பன், உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள், ஆகியோர் தலைமையிலான ஏழு பேர் அடங்கிய தனிப்படை போலீசார் அடங்கிய குழுவினர் டெல்லி சென்றடைந்தனர்.டெல்லி சென்றடைந்த தமிழக காவல்துறை தனிப்படையினர் தலைமறைவாக உள்ள பிரசாந்த் உம்ராவை கைது செய்ய டெல்லி காவல்துறையுடன் இணைந்து தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via