இ. பி. எஸ்-ஓ. பி. எஸ் பசும்பொன் தேவாின் தங்க கவசத்தை பெற முனைப்பு

by Staff / 04-10-2022 05:33:08pm
இ. பி. எஸ்-ஓ. பி. எஸ் பசும்பொன் தேவாின் தங்க  கவசத்தை பெற முனைப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் அளிக்கப்பட்ட தேவாின் தங்க கவசத்தை ஒப்படைப்பதில் இ. பி. எஸ்- ஓ. பி. எஸ் இருதரப்பும் உரிமை கோருவதால் வங்கி நிர்வாகம் குழப்பம் அடைந்துள்ளது. கடந்த 2017 இல் டிடிவி - ஓ. பி. எஸ் இடையிலான சிக்கலின் போது மாவட்ட நிவாகத்திடம் கவசம் ஒப்படைக்கப்பட்டது. அதே நடைமுறை பின்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இ. பி. எஸ். , - ஓ. பி. எஸ். , என இரு தரப்பினரும் கவசத்தை பெற முனைப்பு காட்டி வருவதால் வங்கி அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அ. தி. மு. க. , வை இரு தரப்பும் சொந்தம் கொண்டாடினும் கவசத்தை யார் பெற்றுக் கொடுப்பது என்ற அரசியல் போட்டி நிலவுகிறது. அதனால் தன்மான பிரச்னையாக ஏற்று இரு தரப்பும் முயற்சி எடுக்கின்றனர். இ. பி. எஸ். , தரப்பில் புதிதாக ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று முறை வங்கி அதிகாரிகளை சந்தித்துள்ளனர். ஆனால் ஓ. பி. எஸ். , தரப்பிற்கு ஏற்கனவே ஆவணங்கள் இருப்பதால் மனு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பும் முயற்சித்தாலும் இந்த முறையும் அதிகாரிகளிடம் தான் கவசம் ஒப்படைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

 

Tags :

Share via