அக்டோபர் 14ஆம் தேதி முதல் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களைபெற்றுக்கொள்ளலாம்
தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17-ம் தேதி வெளியானது. மேலும், துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு, அதன் முடிவுகளும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, வரும் அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Tags :



















