சாராயாம் விற்கும் பெண்ணின் மகளை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்து கொலை

by Staff / 11-10-2022 02:58:49pm
சாராயாம்  விற்கும் பெண்ணின் மகளை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்து கொலை

கடலூர் அருகே குறவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவமணி (37) ஆட்டோ டிரைவர் இவர் சத்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளார். இதனிடையே, நேற்றிரவு சிவமணிக்கு செல்போனில் அழைப்பு வந்ததும், வீட்டை விட்டு கிளம்பியவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய சத்யா தெரிந்த இடங்களில் விசாரித்தும் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்று காலை சிவமணி எஸ்.புதூர்-ராமாபுரம் வாழைத்தோப்பில் சருகில் பிணமாக கிடந்தார். அந்தவழியாக சென்ற விவசாயிகள், கழுத்தறுந்து கிடந்த பிணத்தை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்ததில், கடைசியாக சிவமணியிடம் செல்போனில் பேசியது ஒரு பெண் என தெரிய வந்தது. அதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சாராய வியாபாரி பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில், சாராயாம்  விற்கும் பெண் பெயர் வனிதா, அவருக்கும் ஆட்டோ ஓட்டுநர் சிவமணிக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருப்பதும் தெரியவந்தது. நாளடைவில் வனிதாவின் மகளை சிவமணி ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வனிதா, சிவமணியை தனது கூட்டாளிகளின் உதவியோடு கொலை செய்து, உடலை வீசி விட்டு சென்றது தெரியவந்தது.

 

Tags :

Share via