பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

by Admin / 11-10-2022 02:59:41pm
 பயிர் காப்பீட்டுத்  திட்டத்தின் கீழ்விவசாயிகளுக்கு  இழப்பீட்டுத் தொகை-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கினாா்.

வேளாண்மை  மற்றும்  உழவர் நலத்துறை சார்பில், பயிர் காப்பீட்டுத்  திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால்  பாதிக்கப்பட்ட  சிறப்பு பருவ (சம்பா நெல்  உட்பட இதர) பயிர்களுக்கு ரூ. 481 கோடி இழப்பீட்டுத் தொகையினை 4,42,734  விவசாயிகளுக்கு  வழங்கிடும்  அடையாளமாக  10 விவசாயிகளுக்கு  இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கி  தொடங்கி வைத்தார். மழை வெள்ளம்,புயல்,வெயில்  போன்ற காரணங்கள் விவசாயிகளின் பயிர் அழிந்து போய் அவர்கள் சொல்லொண்ணா துயர் அடைந்தை கருத்தில் கொண்டு பயிர்கள் இயற்கை உற்பாதங்களால் பாதிக்கப்படும்  பொழுது அத்தகு  இழப்பிலிருந்து விவசாயியை  மீட்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்டது தான் பயிர்காப்பீட்டுத்திட்டம் என்பது குறிப்பிடத்தது.

 பயிர் காப்பீட்டுத்  திட்டத்தின் கீழ்விவசாயிகளுக்கு  இழப்பீட்டுத் தொகை-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கினாா்.
 

Tags :

Share via