காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

by Staff / 12-10-2023 01:03:21pm
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், 16, 000 கனஅடி தண்ணீர் தரவேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப் போகிறோம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.சென்னையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்னும் 110 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டிய நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. அணையை மீண்டும் திறக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "தற்போது 8 டிஎம்சிக்கு வந்துவிட்டது. இனிமேல் டெத் ஸ்டோரேஜ் வந்துவிடும். இனிமேல் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. காவிரியிலிருந்து 16, 000 கனஅடி கொடுத்தால், அணையை திறக்க வாய்ப்பு இருக்கிறது. குடிதண்ணீருக்கு மட்டும் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via