நிர்வாணப் படத்தை பரப்பிய முன்னாள் கணவன்.. பெண் தற்கொலை

by Staff / 26-06-2024 03:20:07pm
நிர்வாணப் படத்தை பரப்பிய முன்னாள் கணவன்.. பெண் தற்கொலை

முன்னாள் கணவர் நிர்வாண படத்தை எடுத்து பரப்பியதால் பெண் தற்கொலை செய்து கொண்டார். திருவனந்தபுரம் வட்டியூர்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன், விவாகரத்து பெற்ற பெண் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். முன்னாள் கணவரின் சித்ரவதையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அறையில் ஒரு கடிதம் சிக்கியுள்ளது. நிர்வாணப் படத்தை அவரது நண்பனுக்கு மொபைலில் அனுப்பி உடல்ரீதியாக சித்ரவதை செய்ததாக அந்த பெண் தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற பெண், தனது மகளுடன் தனியாக தங்கியிருந்தார். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட முன்னாள் கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கூறியுள்ளனர்.

 

Tags :

Share via