மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று கூறுவது பொய்: அண்ணாமலை

by Staff / 12-10-2023 01:01:53pm
மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று கூறுவது பொய்: அண்ணாமலை

தமிழகத்துக்கு மத்திய அரசுநிதி ஒதுக்கவில்லை என்றுஅமைச்சர் தங்கம் தென்னரசு பொய் கூறுகிறார் என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று அன்றைய நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பொய் கூறிவந்தார். அதே பாணியில், தற்போது சட்டசபையில் பொய் கூறுகிறார் தற்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. தமிழகத்தில் இருந்து கிடைத்ததாக அமைச்சர் கூறும்ரூ. 5. 16 லட்சம் கோடி வரி வருவாயில், நேரடி நிதியாகவே கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிதி ரூ. 4. 77 லட்சம் கோடிஆகும். அமைச்சர் கூறும் ரூ. 2. 08 லட்சம் கோடி கணக்கை எப்படிக் கணக்கிட்டார் என்பதை வெளிப்படையாகக்கூற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories