ராக்கட் ராஜா வை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
ராக்கட் ராஜா வை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆணையின் நகல் கோயம்புத்தூர் மத்திய சிறை அலுவலரிடம் வழங்கபட்டது
கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடையவர் ராக்கட் ராஜா இவரை அண்மையில் திருநெல்வேலி மாவட்ட போலீசார் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்து நாங்குநேரி நீதி மன்றத்தில் ஆஜர் செய்து
கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின்படி நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ராக்கெட்ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யபட்டதற்கான ஆணையினை நெல்லை மாவட்ட போலீசாருக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து நெல்லை போலீசார் உடனடியாக கோயம்புத்தூர் மத்திய சிறையில் இருக்கும் ராக்கட் ராஜாவிற்க்கு தெரிவிப்பதற்காக கோயம்புத்தூர் மத்திய சிறை அலுவர்களுக்கு ஆணையின் நகலை தற்போது கொடுத்துள்ளனர்.
Tags :