சீட்டுப்பணம் தர மறுத்த நபருக்கு கத்திக் குத்து
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ் (52), வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார், இவர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த நாராயணசாமி என்பவரிடம் சீட்டு பணம் கட்டி வந்தார்.
இந்நிலையில் வெங்கடேஸ்வரராவ் கடந்த ஓராண்டுக்கு முன்பு நாராயணசாமியிடம் ரூ.6 லட்சம் சீட்டு பணம் வாங்கி சீட்டு பணம் கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளார், இதனிடயே அவ்வப்போது நாராயணசாமி, வெங்கடேஸ்வர ராவ் வீட்டுக்கு சென்று சீட்டு பணம் கேட்டு வந்த நிலையில் நேற்றும் நாராயணசாமி ராவ் வீட்டிற்கு சென்று சீட்டு பணம் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து நாராயணசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேஸ்வரராவை சராமாரியாக குத்தியுள்ளார், இதில் படுகாயம் அடைந்த வெங்கடேஸ்வரராவ் ஏனாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஏனாம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்வர ராவ் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு ராவை குத்தி கொலை செய்யத நாராயணசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :