தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு பொது போக்குவரத்திற்கு அனுமதி -முதல்வர்

by Editor / 30-11-2021 08:23:07pm
 தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு  பொது போக்குவரத்திற்கு அனுமதி -முதல்வர்

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்மழை பெய்து வருகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திற்கு பொதுப் போக்குவரத்து அனுமதிஏற்கனவே ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கிடையே பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதை போன்று கேரள மாநிலத்திற்கும் பொது போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via