எம்.ஜி.ஆர் சிலை புதுப்பிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மருதத்தூர் கிராமத்தில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் சிலை இருக்கும் இடத்தின் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் விளையாடும் போது தவறுதலாக சிலையில் கை உடைந்தது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து OPS அணியை சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் தொண்டர்கள் சேதமடைந்த எம்ஜிஆர் சிலையை பார்வையிட்டு சேதமடைந்த எம்ஜிஆர் சிலையில் கையை பொருத்தி சிலை புதுப்பிக்கப்பட்டது.இதன் காரணமாக நீடித்த பரப்பரப்பு முடிவுக்கு வந்தது.
Tags :