சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய பைனான்சியர் கற்பழிப்பு வழக்கில் கைது.

by Editor / 17-10-2022 09:15:48am
சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய பைனான்சியர்  கற்பழிப்பு வழக்கில் கைது.

திருச்சி மாவட்டம் .மணப்பாறை அருகேயுள்ள வகுத்தாழ்வார் பட்டியை சேர்ந்தவர்  செல்வி (22) திருச்சி சட்டக்கல்லூரியில்  படித்து வருகிறார். இந்த நிலையில் வகுத்தாழ்வார்பட்டியை சேர்ந்த பைனான்சியர் சத்தியமூர்த்தி (29) என்பவர்  திருமணம் செய்வதாக கூறி செல்வியிடம் பழகி அத்துமீறியுள்ளார். இதன் பின்னர், செல்வியை விட்டு படிப்படியாக விலகியுள்ளார். இதனையடுத்து, தன்னை காதலித்து ஏமாற்றி அத்துமீறிய சத்தியமூர்த்தி மீது  மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து,மகளிர் போலீசார், சத்தியமூர்த்தி மீது கற்பழிப்பு, நம்பிக்கை மோசடி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தியை இன்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மணப்பாறை கிளைச் சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via