சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளனர். சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில் , திருப்புவனம் தாலுகாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருது சகோதரர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அம்மாவட்டத்தில் அக்.23 முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :