தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

by Staff / 28-10-2022 04:03:04pm
தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் சோக்காம்பட்டி எஸ். குரும்பபட்டியை சேர்ந்தவர் காந்திவேல் (வயது 25). இவர் தீபாவளி அன்று தனது மனைவி மற்றும் 1 வயது குழந்தை கபிலனுடன் எஸ். எஸ். எம். கல்லூரி அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். மறுநாள் தனது ஊருக்குச் செல்வதற்காக தனது 1 வயது மகனை பைக்கில் அமர வைத்து அழைத்துச் சென்றார். அப்போது காந்திவேல் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் மயிலாப்பூர் அருகே வந்தபோது பைக்கில் இருந்து குழந்தை தவறி விழுந்து படுகாயம் அடைந்தது. உடனடியாக குழந்தையை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சிறுவன் இன்று அதிகாலைசிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். தந்தை குடிபோதையில் பைக் ஓட்டிய அலட்சியத்தால் 1 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via