ராணுவ வீரர் பலி இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

by Staff / 29-10-2022 04:55:06pm
ராணுவ வீரர் பலி இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் பளுகலை அடுத்த தேவியோடு மாங்காலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் இவரது மனைவி கீதா இவரது மகன் அனூப்குமார்(38)இவருக்கு திருமணம் ஆகி திவ்யா என்ற மனைவியும் அஞ்சனா என்ற மகளும் ஆரோமல் எந்த மகனும் உள்ளனர்.

ராணுவ வீரரான அனூப்குமார் சுபைதராக உத்தரகாண்ட் மாநிலம் ஹல்துவானி என்னு மிடத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்லையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து அவரது உடலை சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் மாங்காலையில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அவருக்கு நீண்ட வரிசையில் நின்று மலர் அஞ்சலி செலுத்தினார். அனூப்குமார் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விடுமுறை கழித்து சென்றுள்ளார்.

அனூப்குமாரின் தந்தை முன்னாள் ராணுவ வீரர் ஆவார். மேலும் அவரது சகோதரர் அஜித் குமார் ராணுவ வீரராக உள்ளார். அப்பகுதியில் ஒரே வீட்டில் மூன்று பேர் ராணுவ வீரராக இருந்தது பெருமைக்குரிய விஷயமாக பொதுமக்கள் பேசினார்.

 

Tags :

Share via