ரூ.1,000 வரவு வைக்கப்படும் தேதி அறிவிப்பு
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்படவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 1 கோடிய 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 1 கோடி பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், திட்டம் தொடங்கப்பட்டு 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி முதல் தவணை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். விண்ணப்பத்தின் நிலை குறித்து பயனர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
Tags :