ரூ.1,000 வரவு வைக்கப்படும் தேதி அறிவிப்பு

by Staff / 07-09-2023 04:52:29pm
ரூ.1,000 வரவு வைக்கப்படும் தேதி அறிவிப்பு

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்படவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 1 கோடிய 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 1 கோடி பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், திட்டம் தொடங்கப்பட்டு 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி முதல் தவணை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். விண்ணப்பத்தின் நிலை குறித்து பயனர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

 

Tags :

Share via