சசிகலா ஆதரவாளர் நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

by Editor / 21-06-2021 09:26:27am
சசிகலா ஆதரவாளர் நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு


பரமக்குடி அருகே சசிகலா ஆதரவாளர் வின்சென்ட் என்பவர் நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலக்காவனூர் என்ற பகுதியில் வின்செண்ட் ராஜா என்பவருக்கு சொந்தமான தார் பிளான் நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீசியதில் அங்கிருந்த கார் எரிந்து சேதம் அடைந்ததாகவும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
வின்சென்ட் ராஜா என்பவர் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்த நிலையில் அவர் அடிக்கடி சசிகலாவுடன் போனில் பேசியதாகவும், இதுகுறித்து ஆடியோ வெளியானதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து அடுத்து வின்சென்ட் ராஜா அதிமுகவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சசிகலா ஆதரவாளர் வின்சென்ட் ராஜா நிறுவனத்தின் மீது திடீரென வெடிகுண்டு வீசப்பட்டதை அடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருவதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

 

Tags :

Share via