கை துப்பாக்கியுடன் இருவர் கைது.. நெல்லையில் பரபரப்பு

by Editor / 31-10-2022 09:02:46am
கை துப்பாக்கியுடன் இருவர் கைது.. நெல்லையில் பரபரப்பு

கோவை கார் வெடிப்புசம்பவம் காரணமாக மாநிலம் முழுவதும் காவல்துறை தீவிர வாகனசோதனைகளை நடத்திவருகின்றது.நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே கை துப்பாக்கியுடன் இருவர் பிடிபட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நள்ளிரவு நெல்லை காவல்துறையினர்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி உடைமையை சோதனையிட்டபோது உள்ளே கை துப்பாக்கி இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இருவரையும் பிடித்து பேருந்து நிலையத்தின் புறக்காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முத்துராஜ் (20) மற்றும் பால்துரை(24) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவர் மீதும் ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via