அடுத்த அடுத்து காதல் கடுப்பாகி கொலை செய்த காதலன்

by Staff / 01-11-2022 12:49:08pm
 அடுத்த அடுத்து காதல் கடுப்பாகி கொலை செய்த காதலன்

ஈரோடு மாவட்டம், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் கார்த்தி - பிருந்தா. பிருந்தா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி வீட்டில் பிணமாக கிடந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பிருந்தா திருமணத்திற்கு முன்பு இருவரை காதலித்து வந்ததும், அதில் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டதும் தெரிய வந்தது. அது மட்டுமின்றி, திருமணத்திற்கு பின்பும் இன்னொருவருடன் காதலை தொடர்ந்துள்ளார்.

இந்தநிலையில், கார்த்தி வெளியூர் செல்ல நேர்ந்துள்ளது. அப்போது காதலி அழைத்தமையால் காதலன் அரவிந்த வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தன்னை திருமணம் செய்யும் படி பிருந்தாவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே பிருந்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பின் சென்னை தப்பிச் சென்றுள்ளார். தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தற்போது அரவிந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via