பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு டி. ஆர். பாலு பதில்

by Staff / 20-03-2024 12:05:37pm
பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு டி. ஆர். பாலு பதில்

மோடியின் பிரதமர் பதவிக்கு ஓய்வு தர தமிழகம் மட்டுமல்ல, இந்திய மக்களே தயாராகிவிட்டனர் என்று திமுக பொருளாளர் டி. ஆர். பாலு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்துக்கு வாரம் தோறும் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்த வாரம் சேலத்தில் பேசிவிட்டுச் சென்றுள்ளார். கடந்த தேர்தல் காலங்களில் பிரதமர்கள் ஓரிரு முறைதான் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்தனர்.ஆனால், பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் என அடிக்கடி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்கிறார். பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு தர, தமிழக மக்கள் மட்டுமல்ல; இந்திய மக்கள் அனைவரும் தயராகிவிட்டனர்.சேலம் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரை நினைவுகூர்வது ஏன்? கோவை பேரணியில் 1998-ல் நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பாஜக ஆரம்பித்துள்ளது.

 

Tags :

Share via