பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவு.

by Editor / 02-11-2022 08:36:45am
பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவு.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடர் மழை இருந்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன்  இன்றுவிடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் த.மோகன்   இன்றுவிடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (2.11.2022) ஒரு நாள்  விடுமுறை முறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர்   பா.முருகேஷ்  உத்தரவு.


 

 

Tags :

Share via