ஒருதலைக்காதல்-ஆசிட்டை ஊற்றிய இளம்பெண்
அரியானா மாநிலத்தில் பஹதுர்கர் என்கிற பகுதியை சேர்ந்தவர் சியாம் (25). இவருக்கு பெற்றோர் இல்லாததால் அத்தை வீட்டில் வளர்ந்து வந்திருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அஞ்சலி சியாமிடம் சொல்லாமல் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வதால்,ஷியாம் தன்னை காதலிப்பதாகவே நினைத்து வந்திருக்கிறார் அஞ்சலி. சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு ஷியாமை மாப்பிளை கேட்டு சென்றுள்ளார். தான் அஞ்சலியை காதலிக்கவில்லை என சியாம் கூறியுள்ளார். பின்னர், அஞ்சலி பற்றி சியாமின் அத்தை விசாரித்தபோது, அஞ்சலிக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரிய வந்திருக்கிறது. இதனால் அஞ்சலியை திருமணம் செய்ய ஷியாமுக்கும் அத்தைக்கும் மனம் வரவில்லை.
இதில் ஆத்திரமடைந்த அஞ்சலி, ஷியாமிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே, நேற்று காலை வழக்கம்போல் பால் வாங்க சியாம் சென்றபோது, அவரை வழிமறித்து பேசிய அஞ்சலி, 5 லிட்டர் கேனில் நிரப்பியிருந்த ஆசிட்டை எடுத்து ஷியாம் மீது ஊற்றினார். கை, கால், உடல் முழுவதும் ஆசிட் பட்டு கதறி துடித்திருக்கிறார் சியாம். பின்பு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில், சியாம் சிகிச்சை பெற்று வருகிறார். அஞ்சலியை போலீசார் கைது செய்தனர்.
Tags :