பணத்திற்காக தந்தையை கொன்ற மகன்

by Staff / 03-11-2022 04:44:40pm
பணத்திற்காக தந்தையை கொன்ற மகன்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்த குமார் போஸ் ( 64). மின்வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் சரவணகுமார் (35) கட்டிட வேலை பார்த்து வந்தார்.குமார் போசுக்கு மாதந்தோறும் வரும் ஓய்வூதிய பணத்தை சரவணகுமார் பல்வேறு காரணங்களை கூறி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.இதனால் தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி வழக்கம் போல் குமார் போசுக்கு ஓய்வூதிய பணம் வந்தது. இதனை சரவணகுமார் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தர முடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார்.இதனால் தந்தை-மகனுக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.நேற்றிரவு இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சரவணகுமார் தனது தந்தை சரமாரியாக அடித்து கீழே தள்ளி காலால் மிதித்துள்ளார்.இதில் குமார் போஸ் படுகாயமடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குமார் போஸ் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார்.

 

Tags :

Share via