சேலத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

by Staff / 14-12-2022 01:22:39pm
சேலத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

சேலம் பெரமனூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகு தியை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 23). இவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். உறவினர் வீட் டில் தங்கி சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி யில் வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து மாலை 4. 30 மணிக்கு வீட்டிற்கு வந்து உள்ளார்.

இந்த நிலையில் வெளியில் சென்றிருந்த அவரது அண்ணன் மனோஜ் இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் திலீப்குமார் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்குமாரின் தற்கொலைக்கான காரணம்என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via