சேலத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து கணவரின் நண்பர் கைது

by Staff / 14-12-2022 01:19:58pm
சேலத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து கணவரின் நண்பர் கைது

சேலம் நரசோதிப்பட்டி பெருமாள் மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி சத்யா (வயது 28). இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனது தாலிக்கொடியை கணவரின் நண்பரான குரங்குச்சாவடி ஓம் சக்தி நகரை சேர்ந்த கார்த்தி (33) என்பவரிடம் கொடுத்து, சூரமங்கலம் கூட்டுறவு சங்கத் தில் அடமானம் வைத்து ரூ. 70 ஆயிரம் பெற்றுள்ளார்.பின்னர் சில நாட்கள் கழித்து கார்த்தியிடம் ரூ. 80 ஆயி ரம் கொடுத்து நகையை மீட்டு தரும்படி சத்யா கூறியுள் ளார். பணத்தை வாங்கிய அவர், நகையை மீட்டு தர வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நிலையில் நேற்று முன்தினம் சத்யா, கார்த்தியிடம் தனது நகையை மீட்டு தரக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட் டார். இதில் ஆத்திரமடைந்த கார்த்தி, சத்யாவை கத்தி யால் குத்தினார். இதில் படுகாயமடைந்த சத்யாவை அக்கம்பக்கத்தினரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.

 

Tags :

Share via