அக்கறையுடன் விஜயகாந்த்தின் இறுதி மரியாதை  ஏற்பாடுகளை முதலமைச்சர் செய்ததாக அரசு அறிக்கை.

by Editor / 29-12-2023 11:56:45pm
அக்கறையுடன் விஜயகாந்த்தின் இறுதி மரியாதை  ஏற்பாடுகளை முதலமைச்சர் செய்ததாக அரசு அறிக்கை.

தேமுதிக நிறுவனத் தலைவர்  விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 28 ஆம் தேதி காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில், தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, ‘ஒரு மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர் என்ற எண்ணம் இல்லாமல், சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல், குறையேதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் அக்கறையுடன் விஜயகாந்த்தின் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

Tags : அக்கறையுடன் விஜயகாந்த்தின் இறுதி மரியாதை  ஏற்பாடுகளை முதலமைச்சர் செய்ததாக அரசு அறிக்கை.

Share via